தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது 01.01.2020 அன்று பிரதேச செயலாளர் திரு ச.சிவஸ்ரீ அவர்களின் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் பாடசாலைகளில் விளையாட்டில் ஈடுபடும் 24 வீரர்களுக்குரிய விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் மற்றும் 100 மாணவர்களுக்குரிய கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்விற்கான நிதிப் பங்களிப்பானது ஒய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் திரு க.கணேசதாஸ் அவர்களால் வழங்கப்பட்டது.

























