கணனி உபயோகம் மூலம் பிறப்பு விவாகம் இறப்புச் சான்றிதழ்களை வழங்கும் புதிய சேவை ஆரம்பம்
பதிவாளர் நாயகத்தின் பிரதான அலுவலகத்தில் இதுவரை காலமும் நிலைப்படுத்தப்பட்டிருந்த பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் உள்ளடக்கப்பட்ட தரவு முறையினை உபயோகித்து இலங்கையின் அனைத்துப் பகுதிகளுக்குமான பிறப்பு விவாகம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களின் பிரதிகளை வழங்கும் புதிய மக்கள் சேவை 31.05.2019 திகதியன்று எமது தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் எமது பிரதேச செயலக பிரதேச செயலாளலர் திரு. ச. சிவஶ்ரீ அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டு பொது மக்கள் சிலருக்கு உத்தியோகபூர்வமாக சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. இதனூடாக மக்கள் நாட்டின் எப்பகுதியிலும் உள்ள பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை எமது பிரதேச செயலக பதிவாளர் பிரினூடாகப் பெற்றுக்கொள்ளப்பட முடியும்.


















