---தேசிய போதை ஒழிப்பு வாரம்---
யூன் மாதம் 23ம் திகதியிலிருந்து யூலை மாதம் 01ம் திகதி வரை. தேசிய பாதுகாப்பிற்கு உதவுவதற்காக எங்கள் கிராமத்தை பாதுகாப்போம். எனும் தொனிப்பொருளில் மேற்படி நிகழ்ச்சியானது முதலாவது நாள் நிகழ்ச்சியாக 24.06.2019 அன்று காலை 09.00 மணியளவில் தெல்லிப்பளை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர்  திருமதி. கோ. சங்கீதா தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 

எமது மக்களின் பெறுமதியான நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மதுசாரம் மற்றும் சிகரட் கம்பனிகளின் தந்திரோபாய ஏமாற்றும் வித்தைகளுக்கு ஏமாந்து பெறுமதியற்றவனாக சந்தோசமற்ற நிம்மதியற்ற வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருக்கும் ஏமாளிகளை வைத்து இலாபமடைபவர்கள் சாராய பியர் மற்றும் சிகரட் உற்பத்தியாளர்களும் விற்பனையாளர்களும் ஆவார்.

எமது நாட்டில் ஒரு வருடத்துக்கு சராசரி 40 ஆயிரம் பேர் சாராயம், பியர், கள்ளு மற்றும் கசிப்பு போன்ற மதுசார வகைகளை குடிப்பதனால் இறப்பதாகவும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் சிகரட், பீடி மற்றும் சுருட்டு போன்ற புகையிலை பொருட்களை பயன்படுத்துவதனாலும் மரணமடைவதாக சுகாதார திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கின்றது.

சாராயம், சிகரட் பாவனையால் உடலில் நோய்த்தாக்கங்கள் மற்றும் மரணம் என்பன ஏற்படுவதுடன் அது மனிதனுக்கும் சமூகத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது எனவே இந்த கொடிய அரக்கனை எமது சமூகத்தில் இருந்து விரட்ட நாம் அனைவரும் ஒன்றிணைவோம் எனும் கருத்திற்கமைவாக உதவிப்பிரதேச செயளாலரின் உரையுடன் போதைப்பொருளின் அபாயம் எனும் காணொளியும்கூட்சிப்படுத்தப்பட்டது. அத்துடன் இந் நிகழ்வில் பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளரும் நிர்வாக உத்யோகத்தரும் மற்றும் பிரதேச செயலக அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

IMG c508c3c8bf6166e5ee9f80f202bb55f4 V  IMG cfd451c7b2e51e1dc0bdcaa5cbf1d30c VIMG 04777f014fac4add131ddb0e2b2ca0d1 V

குடியுரிமை சாசனம்

Scroll To Top