மாவட்டத்தின் சிறந்த செயற்றிட்டத்திற்கான விருது

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் "youth with talent சிரமசக்தி செயற்திட்டம்'" 2018 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கல் விழாவில் தெல்லிப்பளை பிரதேசத்தின் கருகம்பனை இந்து இளைஞர் கழகம் செயற்படுத்திய "கீரிமலை செம்பொன் வாய்க்கால் இந்து மயானத்திற்கான இளைப்பாறு மண்டபம் அமைத்தல் "எனும் செயற்திட்டம் முதலாம் இடத்தினைப் பெற்றமைக்காக இச் செயற்திட்டத்தினை தெரிவு செய்து இளைஞர் சேவை உத்தியோகத்தரையும் இளைஞர் கழகத்தினரையும் நெறிப்படுத்தியமைக்காக மதிப்புக்குரிய எமது பிரதேச செயலாளர் அவர்கள் கௌரவிக்கப்பட்டு விருது வழங்கும் நிகழ்வு 19.07.2019 அன்று நடைபெற்றது.
















