"மக்கள் மைய நிர்வாகம்" பிரதேச உற்பத்தித் திறன் சுட்டி போட்டியில் (CITIZENS MIRROR INDEX 1.0) மாவட்ட ரீதியாக வெற்றி பெற்ற பிரதேச செயலகங்கள் 16.07.2026 அன்று மாவட்டச் செயலக செயலமர்வு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர் .
"மக்கள் மைய நிர்வாகம்" பிரதேச உற்பத்தித் திறன் சுட்டி போட்டியில் மாவட்ட ரீதியில் 82.76 புள்ளிகளையும் AA தரத்தினை பெற்று தெல்லிப்பழை பிரதேச செயலகம் மாவட்ட ரீதியில் 5ஆம் இடத்தினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
























