கலாசார விழா - 2019
வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வலி வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலகமும் கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்தும் கலாசார விழா 2019 மிகச் சிறப்பாக 04.10.2019 வெள்ளிக்கிழமை தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மண்டபத்தில் பிரதேச செயலாளர் திரு. சண்முகராசா சிவஸ்ரீ அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக திரு. இ. இளங்கோவன் (செயலாளர் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு வடமாகாணம்) மற்றும் சிறப்பு விருந்தினராக திரு சி. ரமணராஜா (சிரேஷ்ட விரிவுரையாளர் இந்துநாகரீகத்துறை இந்து கற்கைகள்பீடம் யாழ் பல்கலைக்கழகம்) அத்துடன் கௌரவ விருந்தினர்களாக திரு. தி. வரதன் (அதிபர் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி) மற்றும் கலாபூசணம் மு. சிவப்பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் சிறப்பான கலை நிகழ்வுகளோடு கலைஞர் கௌரவிப்பும் இடம்பெற்றது.

















