தேசிய சுற்றாடல் தின கொண்டாட்ட வாரம்
தேசிய சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு உலகம் முழுவதுமாக மே மாதம் 30 திகதியிலிருந்து யூன் 05 திகதி வரை கடைப்பிடித்துவரும் உலக தேசிய சுற்றாடல் தினக் கொண்டாட்டத்தின் நிகழ்வாக தெல்லிப்பளை பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட கடல் சார் வளங்களை பாதுகாத்தலும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் கழிவகற்றலும் எனும் செயற்றிட்டம் மிகவும் சிறப்பாக 31.05.2019 வெள்ளிக்கிழமை பிரதேச செயலாளர் திரு. ச. சிவஶ்ரீ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.


















