News & Events
- விவரங்கள்
மயிலிட்டி வடக்கு கிராமச் செயலகம் புதிய கட்டடம் திறப்பு
மீள்குடியேற்றப் பகுதியான மயிலிட்டி வடக்கு பகுதி மக்களின் சேவைகளை நிறைவேற்றுமுகமாக அப்பகுதி மக்களுக்கான கிராமச் செயலகம் 27.08.2019 அன்று பாவனைக்காக திறந்து வைக்கப்பட;டுள்ளது.
இந் நிகழ்வானது தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திரு ச. சிவஶ்ரீ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக உயர்திரு நா. வேதநாயகன் அரசாங்க அதிபர் மாவட்டச் செயலகம் யாழ்ப்பாணம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் அக் கட்டடத்தினை மக்கள் பாவனைக்காகவும் திறந்து வைத்து உரையாற்றினார்.
இக் கட்டடமானது 6.5 மில்லியன் நிதிப் பங்களிப்பில் UNDP நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் உதவிப் பரதேச செயலாளர் திருமதி ச. கோகுலதர்சன் மற்றும் கணக்காளர் ப. கஜேந்திரன் அவர்களும் மற்றும் UNDP நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் திரு. முகுந்தன் அவர்ளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

- விவரங்கள்
யாழ் அரச அதிபர் கிண்ணம் 2019
யாழ் அரச அதிபர் கிண்ணம் 2019 இறுதிப் போட்டி 01.08.2019 அன்று யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் அரச அதிபர் மதிப்பிற்குரிய திருவாளர் நாகலிங்கம் வேதநாயகம் அவர்கள் பிரதம அதீதியாக கலந்து சிறப்பிக்க மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இவ் அரச அதிபர் போட்டியில் யாழ் மாவட்டச் செயலகமும் 15 பிரதேச செயலகங்களும் போட்டிகளில் கலந்து கொண்டன. இப் போட்டிகளின் புள்ளிகளின் அடிப்படையில் யாழ் மாவட்டச் செயலகம் முதலாமிடத்தையும் எமது தெல்லிப்பளை பிரதேச செயலகம் 2ம் இடத்தினையும் பெற்றுக் கொண்டது. எமது பிரதேச செயலகம் எமது பிரதேச செயலாளர் திரு ச. சிவஶ்ரீ அவர்களின் வழிகாட்டலிலும் ஊக்கப்படுத்தலிலும் ஏனைய பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பிலும் தொடர்ச்சியாக 3 வருடங்களாக 2 ம் இடத்தினையும் பிரதேசங்களின் மத்தியில் 1ம் இடத்தினையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.



- விவரங்கள்
அமெரிக்க செனட் பிரதிநிதிகள் விஜயம்
தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மீள்குடியேற்ற பிரதேசங்களிற்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க செனட் பிரதிநிதிகள் J/251 மயிலிட்டி துறை வடக்கு கிராம அலுவலர் பிரிவில் மீள் கட்டுமானப் பணிகள் நடைபெறும் மயிலிட்டி துறைமுகத்தினையும் மற்றும் அபிவிருத்தி திட்டங்களையும் பார்வையிட்டதுடன் J/246 மயிலிட்டி வடக்கு கிராம அலுவலர் பிரிவில் மீள்குடியேற்ற பணிகள் குறிந்து நேரடியாக பார்வையிட்டதுடன் வீட்டுத்திட்ட வேலைத்திட்டங்களையும் பார்வையிட்டு அங்குள்ள மகளுடனும் மற்றும் அங்கு கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களுடனும் நேரடியாக கலந்துரையாடல்களையும் மேற்கொண்டனர்.

- விவரங்கள்
மாவட்டத்தின் சிறந்த செயற்றிட்டத்திற்கான விருது

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் "youth with talent சிரமசக்தி செயற்திட்டம்'" 2018 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கல் விழாவில் தெல்லிப்பளை பிரதேசத்தின் கருகம்பனை இந்து இளைஞர் கழகம் செயற்படுத்திய "கீரிமலை செம்பொன் வாய்க்கால் இந்து மயானத்திற்கான இளைப்பாறு மண்டபம் அமைத்தல் "எனும் செயற்திட்டம் முதலாம் இடத்தினைப் பெற்றமைக்காக இச் செயற்திட்டத்தினை தெரிவு செய்து இளைஞர் சேவை உத்தியோகத்தரையும் இளைஞர் கழகத்தினரையும் நெறிப்படுத்தியமைக்காக மதிப்புக்குரிய எமது பிரதேச செயலாளர் அவர்கள் கௌரவிக்கப்பட்டு விருது வழங்கும் நிகழ்வு 19.07.2019 அன்று நடைபெற்றது.
- விவரங்கள்
சமய மேம்பாட்டு வேலைத் திட்டம்
கலாசார அலுவல்கள் திணைக்கள பன்னிரண்டு மாத விளக்கு ஆனி மாத சமய மேம்பாட்டு வேலைத் திட்டம் பன்னாலை கணேசா அறநெறிப் பாடசாலையில் திகதி 21.06.2019 எமது பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் திரு. சத்தியரூபன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.



















